
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்
அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
1 comment:
புது வருடத்தன்று பாரதியின்கவிதை தந்து
வலைப்பூவில் தவழவிட்ட தங்களுக்கும்
நன்றி கலந்த வாழ்த்துக்கள்
Post a Comment