Friday, March 31, 2006

போலி டோண்டுவும் ஒரு பிரார்த்தனையும்



நேற்று டோண்டு அவர்களின் "இரண்டாம் கல்யாண" பதிவிற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன். இன்று காலை அஞ்சல்பெட்டியைத் திறந்ததும் வந்து விழுந்த மடல்களில் ஒன்று அவருடைய பெயரில் இருக்கவும் ஆர்வத்துடன் திறந்து பார்த்தால் அது உண்மையான போலி டோண்டுவின் "வழக்கமான" மடல். எளிதாக அதைப் புறக்கணிக்க முடிந்தாலும் (மட்டுறுத்தத்தின் தேவையை மறுபடியும் உணரச் செய்த மடல்!), சத்தியமாகச் சொல்கிறேன் - இதை அனுப்பியவரின் மீது பரிதாபம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

இம்மாதிரி மடல்கள் தவறானவை என்பது ஒரு பக்கம். இம்மாதிரி எழுதுவதற்கான மனநிலையைக் கொண்டிருக்கும் அவரையும் அவருடன் இருப்பவர்களையும் நினைத்து உண்மையாகவே கவலையாக இருக்கிறது.

அவரது மன சஞ்சலங்களை நீக்கி, ஆத்திரமும் காழ்ப்புணர்வும் கொப்பளிக்கும் மனதைச் சாந்தப்படுத்தி நல்லெண்ணங்களை விதைக்க எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.

சக வலைப்பதிவர்களும் சேர்ந்து ஒரு குறித்த நாளில் குறித்த நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தால் என்ன என்றும் தோன்றுகிறது.

நன்றி.