Tuesday, June 20, 2006

உவமைக் கவிஞர் சுரதா மறைவு : அஞ்சலிகள்!

Image and video hosting by TinyPic
பாரதிக்கு பாரதிதாசன் போல, பாரதிதாசனுக்கு தாசனாக சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட உவமைக் கவிஞர் சுரதா (85) ஜுன் 20-ம் தேதி மரணமடைந்தார்.

அமுதைப் பொழியும் நிலவே
அமுதும் தேனும் எதற்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

போன்ற அவரது பாடல்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை.

அன்னார் அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அண்ணாக்கண்ணனி்ன் வலைப்பதிவில் சுரதா நேர்காணல் ஒன்று இருக்கிறது. சுட்டி : http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112280734633660613.html

Thursday, June 01, 2006

வாழ்க Selective "நடு நிலைமை". வாழ்க Selective "மத சார்பின்மை"!


Disclaimer: மத, ஜாதி தொடர்பான விவாதங்களில் (விஷயமில்லாததால்) கலந்து கொள்வதில்லை, எழுதுவதில்லை என்று சங்கல்பம் செய்திருந்தும் மனக்குரங்கு அடங்காமல் சிலசமயம் கிளம்பிவிடுகிறது. ஆகையால் இந்தப் பதிவு. இது எனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் குரங்கை யாரோ தட்டியெழுப்பிவிட்டதால் விளைந்த வினையே தவிர, நான் காரணமில்லை.

முன்பெல்லாம் திரைப்படங்களில் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் காட்டப்படுபவர்களுக்கு "நடுநிலைமையுடன்" ராம், ரஹீம், ராபர்ட் என்று பெயர் வைத்திருப்பார்கள். ஒற்றைப் பாத்திரமாக இருந்தால் ஏதாவது ஒரு மதத்துக்கான "கெட்-அப்"புடன் வில்லன் காட்சியளிப்பான்.

தி டாவின்சி கோட் திரைப்படத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. இப்போது தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அது தொடர்பான தமிழ் முரசு செய்தி கீழே.
Image and video hosting by TinyPic
மற்ற மதங்களை - குறிப்பாக இந்து மதக் கடவுளரை - இழிவு படுத்தியும், நையாண்டி செய்தும் எத்தனையோ படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன - இன்றும். அவற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு விட்டுவிட்டு, இந்தப் படத்தை மட்டும் தடை செய்திருக்கிறார்கள்.

ஒன்றா "கருத்துச் சுதந்திரம்" என்று எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் "மத நல்லிணக்கத்திற்கு ஊறு" என்ற ரீதியில் எந்த மதத்தைப் பற்றிப் படம் வந்தாலும் தடை செய்யவேண்டும்.

வாழ்க Selective "நடு நிலைமை". வாழ்க Selective "மத சார்பின்மை"!