அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Tuesday, March 27, 2007
துட்டு இல்லையெனின் வெட்டென மற!
பார்க்கவே நெஞ்சு பதைக்கிறது. இதையும் வேடிக்கை என்று சுற்றி நின்று கொண்டு பார்க்கும் மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது. ஆனால் ஏனோ அந்த அப்பனின் மீது கோபம் வரவில்லை. இந்நிலையில் அவர்களை வைத்திருக்கும் சமூகத்தின் மீதும் அச்சமூகத்தைப் பேண வேண்டிய அரசின் மீதும் கோபம் வருகிறது.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால்தான் இப்படி 'உயரத்தில்' வைத்திருக்கிறோமா?
வதைபடும் பிராணிகளுக்குக் குரல் கொடுக்க நீலச் சிலுவைச் சங்கம் இருப்பதுபோல வதைபடும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஏதாவது அமைப்புகள் இருக்கின்றனவா? மன்னிக்க. "துட்டு இல்லையெனின் வெட்டென மற"-என்கிற ஏழைகளின் மந்திரத்தை மறந்துவிட்டேன்.
வேதனையாக இருக்கிறது.
படம் நன்றி: தமிழ்முரசு
Monday, March 26, 2007
ரா உளவு அமைப்பு தலைமறைவான இந்திய அணியைக் கண்டுபிடித்தது !
உலகக் கோப்பையில் தோல்வியைத் தழுவி முதற் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியினர் இன்று காலை மும்பைக்கு வருவதாக இருந்தது. மும்பை வந்த விமானத்தில் அவர்களைக் காணாது அதிர்ச்சியடைந்த அரசு உடனடியாக உளவு அமைப்பான ரா -வின் உதவியை நாடியதில் ரா உளவாளிகள் ஜமைக்காவிற்கு விரைந்து சென்று துப்பறிந்து மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பி பல்வேறு திசைகளில் தேடியதில் விமானத்தில் வராமல் அங்கிருந்து கள்ளத் தோணிகள் மூலமாக இந்தியாவிற்கு வந்து தலைமறைவாக இருந்தவர்களைக் கண்டுபிடித்து விட்டது.
அவர்களை அந்தந்த இடங்களிலேயே விட்டுவிடுமாறு அரசு ரா அமைப்பினருக்கு வலியுறுத்தியதால் அவர்களைப் பிடிக்காமல் திரும்பினர் உளவாளிகள். ஆனாலும் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் சற்றுமுன் வெளியானதில் எல்லாரும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.
அகார்க்கர்
தோனி
திராவிட்
கங்குலி
சச்சின்
கும்ளே
சேவக்
உத்தப்பா
யுவராஜ்
ஜஹீர் கான்
அவர்களை அந்தந்த இடங்களிலேயே விட்டுவிடுமாறு அரசு ரா அமைப்பினருக்கு வலியுறுத்தியதால் அவர்களைப் பிடிக்காமல் திரும்பினர் உளவாளிகள். ஆனாலும் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் சற்றுமுன் வெளியானதில் எல்லாரும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.
அகார்க்கர்
தோனி
திராவிட்
கங்குலி
சச்சின்
கும்ளே
சேவக்
உத்தப்பா
யுவராஜ்
ஜஹீர் கான்
Friday, March 16, 2007
அடப் பாவிகளா!
Thursday, March 15, 2007
கை கொடுக்கும் கால்!
Saturday, March 10, 2007
ரெளத்திரம் கொள்!
ஆறுவது சினம் - ஆனால் இதற்கெல்லாம் ஆறினால் சொரணையற்ற தமிழர்களாகவே இருப்போம்.
சேலம் நெத்திமேடு ஸ்ரீரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த ரோட்டுப்பாடம் இது. தினமலரில் இதைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
இந்த வேலைக்குக் குழந்தைகளை உட்படுத்தியவர்களை என்ன செய்யலாம்? அங்கிருக்கும் வலையுலக நண்பர்கள் அதிகார வர்க்கத்திடம் கடுமையான கண்டனங்களையும் புகார்களையும் அளித்து இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆத்திரத்தில் ஏதாவது கெட்டவார்த்தையை பயன்படுத்திவிடுவேன் என்று அஞ்சுவதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
***
சேலம் நெத்திமேடு ஸ்ரீரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த ரோட்டுப்பாடம் இது. தினமலரில் இதைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
இந்த வேலைக்குக் குழந்தைகளை உட்படுத்தியவர்களை என்ன செய்யலாம்? அங்கிருக்கும் வலையுலக நண்பர்கள் அதிகார வர்க்கத்திடம் கடுமையான கண்டனங்களையும் புகார்களையும் அளித்து இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆத்திரத்தில் ஏதாவது கெட்டவார்த்தையை பயன்படுத்திவிடுவேன் என்று அஞ்சுவதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
***
Subscribe to:
Posts (Atom)