Tuesday, March 27, 2007

துட்டு இல்லையெனின் வெட்டென மற!

Image and video hosting by TinyPic

பார்க்கவே நெஞ்சு பதைக்கிறது. இதையும் வேடிக்கை என்று சுற்றி நின்று கொண்டு பார்க்கும் மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது. ஆனால் ஏனோ அந்த அப்பனின் மீது கோபம் வரவில்லை. இந்நிலையில் அவர்களை வைத்திருக்கும் சமூகத்தின் மீதும் அச்சமூகத்தைப் பேண வேண்டிய அரசின் மீதும் கோபம் வருகிறது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால்தான் இப்படி 'உயரத்தில்' வைத்திருக்கிறோமா?

வதைபடும் பிராணிகளுக்குக் குரல் கொடுக்க நீலச் சிலுவைச் சங்கம் இருப்பதுபோல வதைபடும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஏதாவது அமைப்புகள் இருக்கின்றனவா? மன்னிக்க. "துட்டு இல்லையெனின் வெட்டென மற"-என்கிற ஏழைகளின் மந்திரத்தை மறந்துவிட்டேன்.

வேதனையாக இருக்கிறது.

படம் நன்றி: தமிழ்முரசு

No comments: