Thursday, May 27, 2010

ஒரு கதை சொல்லு


வழக்கம் போல நேற்றிரவும் குழந்தைகளுக்கு ஒரு கதை. முன்னேற்பாடாக எந்தக் கதையையும் படித்து வைத்துக்கொள்ளாததால் இட்டுக்கட்டி ஒரு கதையைச் சின்னவளுக்குச் சொன்னேன்.

கொட்டாவி விட்டுக்கொண்டே நான் கதையை ஒருவழியாகச் சொல்லி முடிக்க, கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டு கேட்டுவிட்டு என் கழுத்தைக் கட்டிக்கொண்டு "Thank You daddy" என்று சொல்லி போனஸாக ஒரு முத்தத்தையும் கொடுக்கப் புல்லரித்தது. குழந்தையின் சின்னஞ்சிறு உதடுகள் கன்னத்தில் படும்போது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட உணர்வு எழும். எப்போதும் போல Good Night சொல்லிவிட்டுத் தூங்கியிருந்தாளானால் அது இன்னொரு இரவாகப் போயிருக்கும். அவள் சிறிது யோசனையுடன் “டாடி. Did you read this story somewhere?" எனக் கேட்டாள்.

“இல்லம்மா. நானா கற்பனை பண்ணிச் சொன்னது”

“you mean you created the story all by yourself?"

“ஆமா”

இன்னும் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு புன்னகையுடன் தூங்கிப் போய்விட்டாள். என்ன யோசித்திருப்பாள் என்று ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளின் உலகம் மிகவும் அலாதியானது என்பதை மறுபடியும் உணர்ந்தேன்.

***

1 comment:

Anonymous said...

அழகிய தருணம் ஒன்றை கச்சிதமாகக் catch பிடித்திருக்கிறது இந்தப் பாசத் தமிழ்!!