Saturday, October 07, 2017

குண்டூசி விற்பவர்களும், புண்ணாக்கு விற்பவர்களும்!

புகழ்பெற்ற ஒருவர் புலாவ் சாப்பிட்டு ஏப்பம் விட்டாலே அவரைப் புலவர் என்று பட்டம் கொடுத்து அழைக்கும் தமிழ்ச் சமூகச் சூழலில் 'பிரம்மாண்ட' இயக்குநர் ஷங்கர் எழுத்தாளர் ஷங்கர் ஆனதில் வியப்பேயில்லை.
இதற்குப் போய் சாரு இவ்வளவு பெரிய கட்டுரை எழுதவேண்டுமா என்றால் எழுதவேண்டும்தான். போகிறவன் வருகிறவன், குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் கவிஞர் என்று தன்னை அழைத்துக்கொள்வதையும், பாரதியையும் தன்னையும் ஒரே தராசில் நிறுத்தி புலவர் என்று கூசாமல் அடைமொழி போட்டுக்கொள்பவர்களையும், எவ்வளவு பெரிய எழுத்தாளர்களெல்லாம் இருக்க தன்னை எழுத்தாளர் என்று ஒருவர் அழைப்பதை அனுமதிப்பவர்களையும் எவ்வளவு நாள்தான் சகித்துக்கொண்டு அறச்சீற்றம் கொள்ளாமல் ஒருவன் வாழ முடியும்!


No comments: