Monday, October 02, 2017

2017-இல் பருவ மழையும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளும்!

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 1996-க்குப் பிறகு இந்த வருடந்தான் ஜூன் - செப் காலப் பருவமழை வழக்கத்தைவிட 30% க்கு மேல் பெய்திருக்கிறது. நகரங்களில் மழையளவு 15% மேல் பெய்திருக்கிறது.

தமிழக அரசு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில் நீர் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளைத் துரித கதியில் முடுக்கிவிட்டிருக்கிறது. 25000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாநிலத்திலிருக்கும் பல்லாயிரக்கணக்கான நீராதாரங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்து, வாய்க்கால்களையும், மற்ற நீர் செல்லும் வழிகளையும், ஜாதி, மதம், கட்சி என் எந்தப் பாகுபாடுமின்றி, ஓட்டுக்காக யார் காலையும் நக்காமல், அரசு இயந்திரங்களை முடுக்கி ஆக்கிரமிப்புகளை கடந்த ஆறுமாத காலமாக அகற்றி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மொத்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு நீர்வழித்தடங்கள் சீராகி, பெய்யும் மழையில் ஒரு துளிகூட வீணாகமல் சேமிக்கப்படும்.

தனது வீட்டையும், கார்களையும், நிலங்களையும் விற்றுச் சொந்தக்காசில் இதுவரை தமிழக விவசாயிகளுக்காக இதுவரை தில்லியில் பலவிதங்களில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ண்ணு, மழை நிறையப் பெய்திருப்பதால் இனிமேல் விவசாயம் தழைக்கும் என்பதால் போராட்டங்களை விலக்கிக்கொண்டு, கைவிட்டு, தமிழகம் திரும்பி வயற்காட்டிற்கு நேரடியாகச் சென்றார்.
தேவையில்லாத ஓட்டு பெறுவதற்காகத் தொடங்கப்பட்ட இலவசத் திட்டங்களை ரத்து செய்து அந்த நிதி இனிமேல் மாநிலக் கட்டமைப்புகளுக்காகச் செலவழிக்கபடும் என்ற அறிவிப்பு நாளை காந்தி ஜெயந்தியன்று வெளியிடுகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து மணல் குவாரிகளும், கற் குவாரிகளும் மூடப்பட்டு, மணல் அள்ளும், கல்லுடைக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்படுகிறது. ஆற்று மணலை கையால் அள்ளினாலும் உடனடி சிறை என்ற சட்டம் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட உள்ளது. யாரேனும் எங்கேனும் மணல் கடத்துவதாகத் தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக 109 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரிவித்தால் போதும். 108 ஆம்புலன்ஸ் போலவே 109 என்ற அவசர அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 கமாண்டோக்களடங்கிய அதிரடிப்படை நிறுவப்பட்டு 25 ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும். 109 அழைப்புகளுக்கு இந்த அதிரடிப்படை உடனடியாக களத்திலிறங்கி மணலைக் கடத்துபவர்களைக் கண்டதும் சுட அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் 110 எண்ணுக்கு அழைத்தால் மரம் வெட்டுபவர்களையும், கடத்துபவர்களையும் கண்டதும் சுடும் அதிகாரத்துடனான காடு பாதுகாப்புப் படை நிறுவப்பட்டிருக்கிறது. மொத்தம் 10000 அதி உயர் நுட்ப ட்ரோன்களை தமிழகம் அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ட் ரோன்களைத்தான் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை வேட்டையாட உபயோகிக்கிறது. இந்த ட்ரோன்களில் லேசர் வழிகாட்டும் சிறு ரக ஏவுகணைகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மரம் கடத்தும் எவரும் கேள்விகேட்காமல் போட்டுத்தள்ள இந்த அமைப்பு உதவும்.
இயற்கை வளங்களை முழுவதும் பாதுகாத்து வருங்கால சந்ததிகள் தழைப்பதே ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள் என்பதை முதல்வர் தெரிவித்தார். இதை தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் ஒருமனதாகப் பாராட்டியுள்ளனர். யாரும் இது மோடியின் சதி என்று திட்டவில்லை.
அனைத்து நடுநிலை வகிப்பவர்களும் பாராட்டும் விதமாக, 'கடவுள் இல்லை, கடவுளைக் கும்பிடுகிறவன் காட்டு மிராண்டி' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஆளுயர பெரியார் சிலைகளை தமிழகத்தின் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்கள் முன்னும் நிறுவ அரசு உத்தரவிட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான செலவை அந்தந்த மத அமைப்புகள் எவ்வளவு கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இருக்கின்றனவோ அதற்குத் தகுந்தாற்போல் கணக்கிட்டுப் பங்கிட்டுக்கொள்ள இசைந்திருக்கிறார்கள். 'இவ்வளவு நாள் ஸ்ரீரங்கம் கோவில் முன்பு மட்டும் பெரியார் சிலை வைத்து இந்துக்களை மரியாதை செய்த அரசு, இப்போது சிறுபான்மையினர் மீதும் அதே கரிசனத்தைக் காட்டுவது, தாமதமான முடிவு என்றாலும், வரவேற்கிறோம்' என்று ராமுடன் சேர்ந்து நின்று ரஹீமும் ராபர்ட்டும் கூட்டறிக்கை விட்டிருக்கிறார்கள். 'இச்சிலைகளை ஈமாமும், பாதிரியாரும், பூசாரியும் மட்டும்தான் திறந்து வைக்கவேண்டும். நாங்கள் காசு போட்டிருப்பதால். இதிலும் புகழை மட்டும் எடுத்துக்கொள் திகவினர் முனையக்கூடாது' என்று மூவரும் அன்புக் கட்டளை விடுத்திருக்கின்றனர். 'வேண்டுமானால் பறவை எச்சத்தையும், நாய்கள் பெய்யும் மூத்திரத்தையும், மனிதர்கள் துப்பி, மூக்கு சீந்தி வைத்திருப்பதையும், துடைத்துச் சுத்தம் பண்ணும் அரிய பணியை திகவினருக்கு விட்டுக்கொடுக்கத் தயார்' என்றும் பெருந்தன்மையுடன் அவர்கள் அறிவித்தனர். இதைக்கேட்ட தலைவர் வீரமணி ஆனந்தக் கண்ணீருடன் மூவருக்கும் சால்வை போர்த்திப் பாராட்டி கழகத் தோழர்களுக்கு ப்ரஷ், சோப், வாளித் தண்ணீரை இலவசமாக வழங்க தீவுத் திடலில் மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். 'என் துண்டால் சிலையைத் துடைத்து இப்பணியைத் துவக்கிவைப்பேன்' என்று முழங்கினார்.
***
முதல் பத்தி மட்டும் உண்மை. மற்ற பத்திகள் உண்மையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை! 

No comments: