Monday, October 02, 2017

Groin Swelling

Groin Swelling என்றொரு பிரச்சினை சிலருக்கு வரும். எனக்கு மிகச் சிறு வயதில் வந்திருக்கிறது. நன்றாக வலிக்கும். அதற்கு 'நெறி கட்டியிருக்கு' என்று பாட்டி சொல்வார்கள். இரண்டொரு நாளில் சுண்ணாம்பு, வெந்நீர் போன்ற சிசுருஷைகளில் சரியாகிவிடும். ஆனால் நிரந்தரமாக நெறிகட்டியிருப்பதால் வலியில் அவதிப்பட்டு வெறிபிடித்து இருக்கும் சில ஆசாமிகள் தமிழ் ஊடகங்களில் உலவுகிறார்கள். அவர்களுக்கு 'நெறியாளர்கள்' என்று பெயர். கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் நக்கல், நையாண்டி, அவமரியாதை செய்தல், அவமானப்படுத்துதல், வேண்டுமென்றே புண்படுத்தும் விதமாகக் கேள்விகேட்டு பேட்டியெடுக்கப்படுபவர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் சினங்கொண்டு கொந்தளித்து எதையாவது சொல்ல மாட்டார்களா, செய்யமாட்டார்களா, அதை வைத்து மறுபடியும் மறுபடியும் பரபரப்புச் செய்தி வெளியிட்டு தமது சானலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தலாமா என்பது ஒன்றுதான் இந்த 'நெறியாளர்களின்' தலையாய நோக்கம். இதில் தர்மத்திற்கோ, நேர்மைக்கோ, பண்புக்கோ இடமில்லை.
நான்கைந்து பேரைச் சேர்த்துவைத்துக்கொண்டு ஒரே சமயத்தில் எல்லோரும் உச்சஸ்தாயியில் கத்தும் இந்த நெறியாளர்களின் நிகழ்ச்சிகள் எல்லாமே தொட்டியில் எச்சில் இலைகளுக்குச் சண்டைபோடும் தெருநாய்களின் ஓலத்தை நினைவூட்டி அருவெறுப்பிலாழ்த்துகிறது!

No comments: